
ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் விழா புதன்கிழமை காலை நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டி மகாகணபதி, காளியம்மன், சப்த கன்னிமார் மற்றும் கருப்பனார் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ஆம் தேதி கணபதி யாகத்துடன் தொடங்கியது. இதையடுத்து தீர்த்தக்குடம், பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.இதில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து புதன்கிழமை காலை 5 மணிக்கு நான்கு கால யாக பூஜைகள் முடிந்து, பூர்ணாஹூதி செய்யப்பட்டு, யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கலசங்களை சிவாச்சாரியர்கள் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று கோபுரக் கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.தொடர்ந்து பரிவார தெய்வங்கள் மற்றும் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





