திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

கெங்கவல்லியில் இன்று ஜல்லிக்கட்டு விழா: 450 காளைகள் பங்கேற்பு

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில்  முதல் முறையாக ஜல்லிக்கட்டு விழா வியாழக்கிழமை (மார்ச் 29)  காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை   நடைபெற உள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 3:51 am

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில்  முதல் முறையாக ஜல்லிக்கட்டு விழா வியாழக்கிழமை (மார்ச் 29)  காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை   நடைபெற உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு விழாவில்  மதுரை, பெரம்பலூர்,  லால்குடி, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து மொத்தம் 450 க்கும் மேற்பட்ட காளைகளுக்கு முறையாக பாக்கு, வெற்றிலை வைத்து விழாக்குழுவினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். காளைகளை பரிசோதனை செய்து முறையாக அனுப்ப கால்நடைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காளைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி. ராஜன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.   
விழாவில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளின் உரிமையாளர்களுக்கும்,  மாடுபிடி  வீரர்களுக்கும் விழாக்குழுவினர் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. விழாவைக் காண சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தம்மம்பட்டி, ஆத்தூரிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.