காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நட்டுவம்பாளையம் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம்

சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர்  சேர்க்கை தொடங்கியுள்ளது. 

Updated On :21 மே 2018, 1:04 am

சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர்  சேர்க்கை தொடங்கியுள்ளது. 
இதுகுறித்து அந்தப் பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் நீதிதேவன் கூறியது: 
நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 6-ஆம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு  நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 7-ஆம் வகுப்பும், நிகழாண்டு 8-ஆம் வகுப்பு தொடங்கப்பட்டு அதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப் பள்ளியில் யோகா, தியானம், கூட்டு உடற்பயிற்சி, சிலம்பம், விளையாட்டுப் பயிற்சி,  நடனப் பயிற்சி, சதுரங்க மன்றம், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள்,  டிசிஎஸ் நிறுவனத்தால் கணினி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 
எனவே, ஏப்ரல் 25-ஆம் தேதி மாணவ, மாணவிகள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.