எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் சங்ககிரி கல்வி மாவட்டத்தில் 95 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சங்ககிரி கல்வி மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 113 அரசுப் பள்ளிகள், 8 அரசு உதவிபெறும் பள்ளிகள், 12 தனியார் பள்ளிகள், 71 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இருந்து 9023 மாணவர்களும், 8178 மாணவிகளும் தேர்வு எழுதினர். அதில் 8297 மாணவர்களும், 8178 மாணவிகளும் மொத்தம் 16475 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 9 பேரும், அறிவியல் பாடத்தில் 19 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 111 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மகுடஞ்சாவடி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கொங்கணாபுரம், மாதிரிப் பள்ளிகள் காடையாம்பட்டி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, எடப்பாடி, அரசு மேல்நிலைப் பள்ளிகள் குண்டுக்கல், பெரியகாடம்பட்டி, நீதிபுரம், மாதையன்குட்டை, கோனூர், குஞ்சாண்டியூர், வடுகப்பட்டி, சேலம்கேம், அக்கமாபேட்டை, கச்சுப்பள்ளி, கன்னியாம்பட்டி, சின்னசோரகை, பாகல்பட்டி, கோரணம்பட்டி, நெடுங்குளம், எம்.என்.பட்டி, ராமன்பட்டி, ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளி,மேட்டூர்அணை செயின்ட் மேரீஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சின்னதண்டா ஸ்ரீ ராமகிருஷ்ணா குருகுல உயர்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 27 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழ்ப் பாடத்தில் 476, ஆங்கிலத்தில் 447, கணிதத்தில் 692, அறிவியல் 90, சமூக அறிவியல் 436 பேரும் தேர்ச்சி பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 5,000 லஞ்சம்: சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கைது

கல்குவாரிகளால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கிராம மக்கள் மனு

ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்

சங்கரன்கோவிலில் இன்று ஆடித் தவசுக் காட்சி
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


