இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ஆசிரியர் தின விழா: தலைமை ஆசிரியர் காலில் விழுந்து ஆசி பெற்ற ஆட்சியர்

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், பள்ளித் தலைமை ஆசிரியரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், பள்ளித் தலைமை ஆசிரியரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
 ஆசிரியர் தினவிழாவையொட்டி சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பங்கேற்று கேக் வெட்டி பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
 கடந்த கல்வியாண்டில் அதிகம் தேர்ச்சி சதவிகிதம் அளித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.
 விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், பள்ளி தலைமையாசிரியர் தமிழ்வாணிக்கு பொன்னாடை அணிவித்தார். பின்னர் திடீரென அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று மாணவியரை நெகிழ வைத்தார். முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 அதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு, தனியார் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.