தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்திமார்ச் 1 முதல் கறவை மாடுகளுடன் போராட்டம்: பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானம்

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி, மார்ச் 1 முதல் கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்த தமிழ்நாடு

Updated On :25 பிப்ரவரி 2019, 8:32 am IST

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி, மார்ச் 1 முதல் கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் கறவை மாடுகளுடன் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மேலும் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகமது அலி செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் தொடர்ச்சியாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பால் கொள்முதல் விலை இதற்கு முன்பாக 2014-இல் பசும்பாலுக்கு ரூ. 28-ம், எருமைப் பாலுக்கு ரூ. 35-ம் குறைந்தபட்ச கொள்முதல் விலையாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதற்கு பின் இதுவரை கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு மறுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட இதர விவசாய பொருள்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் கொள்முதல் விலையை உயர்த்தி குறைந்தபட்ச விலையை அறிவிக்கிறது. ஆனால் பால் கொள்முதலுக்கான விலையை உயர்த்தவில்லை. உயர்த்தினால் விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். இதனால் ஆவின் விற்பனை விலையை உயர்த்தும் சூழ்நிலை ஏற்படும். விமர்சனம் ஏற்படும் என்பதற்காக அரசியல் லாபத்துக்காக பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு மறுத்து வருகிறது.
அந்த வகையில், பால் கொள்முதல் விலையை உயர்த்த விலயுறுத்தி மார்ச் 1 ஆம் தேதி முதல் கறவை மாடுகளுடன் கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றிய அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.