கல்வராயன் மலை கருமந்துறையில் போலி பெண் மருத்துவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியில் முறையாக ஆங்கில மருத்துவம் படிக்காமல் சிலர், பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றுள்ளன.
இதையடுத்து, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினர், கல்வராயன்மலை கருமந்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, செவிலியர் பட்டயப் படிப்பு படித்துள்ள உமா மகேஸ்வரி (35), கருமந்துறையில் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி கருமந்துறை போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த கருமந்துறை போலீஸார் போலி பெண் மருத்துவர் உமாமகேஸ்வரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மலைக் கிராமங்கள் உள்ளிட்ட கிராமங்களில், முறையாக மருத்துவர் பட்டம் பெறாமல் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி அலோபதி சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை!

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


