ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

பிரதமர் மோடியின் சமீபத்திய பெங்களூரு வருகையின் போது ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :25 மே 2026, 9:24 am IST

பிரதமர் மோடியின் சமீபத்திய பெங்களூரு வருகையின் போது ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் 45வது ஆண்டு விழா மே 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவரின் பாதுகாப்பு வாகனப் பேரணி செல்லும் பாதையில் இருந்து இரண்டு ஜெலட்டின் குச்சிகள் கண்டறியப்பட்டன.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர் ஒருவர் இதனைக் கவனித்தார். இதுகுறித்து கக்கலிபுரா காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் கடமை தவறியதாக பெங்களூரு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்த உள் துறை விசாரணைக்குப் பிறகு, பெங்களூரு தெற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாஸ் கௌடா இந்த பணியிடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சாத்தனூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர், கக்கலிபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் நான்கு காவலர்கள் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Summary

Six policemen have been suspended on charges of dereliction of duty following the recovery of gelatin sticks ahead of Prime Minister Narendra Modi's visit to the Art of Living Centre on the outskirts of the city on May 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.