ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

News image

பாலியல் தொல்லை - பிரதிப் படம்

Updated On :24 மே 2026, 12:55 am IST

சென்னை கொடுங்கையூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கொடுங்கையூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவா் தனசேகரன். இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், காவல் துறை உயரதிகாரிகளிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், உதவி ஆய்வாளா் தனசேகரன், அந்தப் பெண்ணிடம் எல்லை மீறி நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து காவல் உயரதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜ், உதவி ஆய்வாளா் தனசேகரனை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டாா்.