சங்ககிரி அருகே தனியார் ஆம்னி பேருந்து மோதி இளைஞர் பலி
சங்ககிரியை அடுத்த ஐவேலி மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது செவ்வாய்க்கிழமை தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


சங்ககிரியை அடுத்த ஐவேலி மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது செவ்வாய்க்கிழமை தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
ஈரோடு, கருங்கல்பாளையம், கிருஷ்ணா வீதி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகவேல் மகன் செந்தில்குமரன் (32). இவர் இரு சக்கரவாகனத்தில் ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சங்ககிரியிலிருந்து சேலம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது கொச்சினிலிருந்து அசாம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து எதிர்பாரதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. அதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அவர் பலத்த காயமடைந்ததில் நிகழ்விடத்திலேயே இறந்துவிட்டார். ஆம்னி பேருந்து தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள பாலத்தில் மோதியதில் பேருந்தில் பயணம் நான்கு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிசிக்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...