நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஓபிஎஸ்ஸிடம் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஆர்.பி. உதயகுமார்

அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஓ. பன்னீர்செல்வத்திடம் திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஆர்.பி. உதயகுமார்

News image

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்

Updated On :27 பிப்ரவரி 2026, 11:59 am

அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஓ. பன்னீர்செல்வத்திடம் திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், "ஒரு தொண்டன் நாடாள முடியுமா என்ற கேள்விக்கு அதிமுகவில் முடியும் என்பதற்கு சாட்சி ஓ. பன்னீர்செல்வம். இனிமேலும் அவர் என்ன பதவி வேண்டும்?

நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளுங்கள். அதுபற்றி கவலையில்லை. ஆனால், அதிமுக இனி ஜெயிக்காது; அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை. தென் தமிழகத்தில் வளர விடமாட்டேன் என்று கூறுகிறார். அவருக்கு மனசாட்சி இருக்கிறதா?

அறிவாலயத்தில் போய்சேர்ந்தபோதே, அவர் செத்த பிணத்துக்கு சமானம். இனிமேல், நீங்கள் எது சொன்னாலும், தொண்டர்களோ மக்களோ நம்பத் தயாராக இல்லை.

அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஓபிஎஸ் மீது திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவர் ஆரம்பத்திலிருந்தே திமுகவின் மறைக்கப்பட்ட கூட்டாளியாக செயல்பட்டு வந்தாரா? இப்போது, இந்தக் கேள்விதான் தொண்டர்களிடையே அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் சட்ட வழக்குகளில் ஜெயலலிதா குற்றவாளியாக பதவி விலக வேண்டியிருந்தபோது, ஓபிஎஸ் தான் இடைக்கால முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஆனால், அந்தக் கடினமான காலங்களிலும் அவர் திமுகவுடன் மறைமுக கூட்டணியில் பணியாற்றினாரா என்பது குறித்து தொண்டர்களில் ஒரு பிரிவினரிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Summary

DMK Chief Stalin should remain cautious of Panneerselvam, says Deputy Opposition leader RB Udhayakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.