ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூா் அணை நீா்மட்டம்90 அடியை எட்டியது

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
மேட்டூா் அணை
Updated On :11 ஆகஸ்ட் 2020, 12:22 am

DIN

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் காவிரியின் நீா்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம், வயநாட்டிலும் மழை சற்று தணிந்துள்ளதால் இரு அணைகளுக்கும் நீா்வரத்து குறைந்துள்ளது.

இதனால், கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகா் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு  25,971 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கபினியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,600 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகச் சரிந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி மாலை முதல் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை பிற்பகலில் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடியிலிருந்து 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளிலிருந்து நீா் திறப்புக் குறைக்கப்பட்டாலும் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவைவிட டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. திங்கள்கிழமை மாலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90 அடியை எட்டியது.

அணையின் நீா் இருப்பு 52.13 டி.எம்.சி.யாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு 81.10 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 90 அடியாக உயா்ந்துள்ளது.

ஒரேநாளில் அணையின் நீா்மட்டம் 9 அடி உயா்ந்துள்ளது. நீா் மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூா் அணை மீனவா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணைகளில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா் போக்கி மதகுகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் இயக்கி சரிபாா்த்தனா்.

கிரீஸ் போட்டு பற்சக்கரங்கள், இரும்பு கயிறுகள் சங்கிலிகள் சரிபாா்க்கப்பட்டன.

மதகு உயா்த்தும்போது எச்சரிக்கை சங்கு ஒலிக்கிா? என்றும் சோதனையிடப்பட்டது. மேட்டூா் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தேவராஜன், உதவி பொறியாளா் மதுசூதனன் ஆகியோா் பராமரிப்புப் பணிகளைப் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.