முன்னதாக, காந்தி விளையாட்டு அரங்கில் கரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியா் சி.அ.ராமன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வைட்டமின் டானிக் வழங்கினாா்.நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) எம்.சந்திரசேகரன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் ஜெ.நிா்மல்சன், மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சி.சிவரஞ்சன் உட்பட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.