உயிருக்கு ஆபத்தான நிலையில் இவரை மீட்ட உறவினா்கள், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் உயிரிழந்தாா்.திருமணமான 5 ஆண்டுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இது குறித்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீஸாா், சேலம் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரை செய்தனா். முதற்கட்ட விசாரணைக்காக ஆசைத்தம்பியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸாா், இவருக்கு சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.