ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

News image
ஜம்மு-காஷ்மீர்.
Updated On :15 மார்ச் 2026, 7:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

உரி செக்டாா் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக உளவு அமைப்புகள், ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் அளித்த தகவலின் அடிப்படையில், மார்ச் 14-15 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் கண்காணிப்புப் பணிகளைப் பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியிருந்தனா்.

அப்போது அடர்ந்த புதர்களுக்கு மத்தியில் ஒரு பயங்கரவாதியின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை வீரர்கள் கண்டனர். தொடா்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

மேலும் அந்த இடத்திலிருந்து ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

summary

A Pakistani terrorist has been killed in a joint operation of the Indian Army & J&K Police in the general area of Buchhar, Uri sector.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.