தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

J-K: Pakistani terrorist killed as Indian Army foils infiltration attempt in Uri

ஜம்மு-காஷ்மீர்.

Published On :

ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

உரி செக்டாா் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக உளவு அமைப்புகள், ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் அளித்த தகவலின் அடிப்படையில், மார்ச் 14-15 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் கண்காணிப்புப் பணிகளைப் பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியிருந்தனா்.

அப்போது அடர்ந்த புதர்களுக்கு மத்தியில் ஒரு பயங்கரவாதியின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை வீரர்கள் கண்டனர். தொடா்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

மேலும் அந்த இடத்திலிருந்து ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Summary

A Pakistani terrorist has been killed in a joint operation of the Indian Army & J&K Police in the general area of Buchhar, Uri sector.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.