ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி

சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 குழந்தைகள் பலியாகின.

News image
சிலிண்டர் வெடித்ததில் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்.
Updated On :15 மார்ச் 2026, 6:09 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 குழந்தைகள் பலியாகின.

சென்னையை அடுத்த நாவலூரில் எரிவாயு சிலிண்டர் ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 வயது பெண் குழந்தை, ஒன்றரை வயது ஆண் குழந்தை என 2 குழந்தைகள் பலியாகின.

மேலும் படுகாயமடைந்த 7 வயது சிறுவன் உள்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்து சிறுசேரி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 3 வீடுகள், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சிலிண்டர் விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.