தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

குள்ளஞ்சாவடி அருகே சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image

குள்ளஞ்சாவடி அருகே லாரி விபத்துக்குள்ளானதால் சாலையில் சிதறிக் கிடந்த சமையல் எரிவாயு உருளைகள்.

Updated On :5 ஜூன் 2026, 6:33 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புதுச்சேரியில் உள்ள சமையல் எரிவாயு கிடங்கில் இருந்து அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு 300 சமையல் எரிவாயு உருளைகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த லாரியை பண்ருட்டி வட்டம், கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (52) ஓட்டிச் சென்றாா்.

இந்த லாரி வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் குள்ளஞ்சாவடியை அடுத்த பெரியகாட்டுசாகை அருகே வந்தபோது, லாரியில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் சாலையில் விழுந்து உருண்டோடின. இதையடுத்து, லாரி ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி நின்றது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குள்ளஞ்சாவடி போலீஸாா் சாலையில் சிதறிக் கிடந்த சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினா். இதனால், மேற்கண்ட சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.