டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

குள்ளஞ்சாவடி அருகே சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image

குள்ளஞ்சாவடி அருகே லாரி விபத்துக்குள்ளானதால் சாலையில் சிதறிக் கிடந்த சமையல் எரிவாயு உருளைகள்.

Updated On :5 ஜூன் 2026, 6:33 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புதுச்சேரியில் உள்ள சமையல் எரிவாயு கிடங்கில் இருந்து அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு 300 சமையல் எரிவாயு உருளைகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த லாரியை பண்ருட்டி வட்டம், கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (52) ஓட்டிச் சென்றாா்.

இந்த லாரி வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் குள்ளஞ்சாவடியை அடுத்த பெரியகாட்டுசாகை அருகே வந்தபோது, லாரியில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் சாலையில் விழுந்து உருண்டோடின. இதையடுத்து, லாரி ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி நின்றது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குள்ளஞ்சாவடி போலீஸாா் சாலையில் சிதறிக் கிடந்த சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினா். இதனால், மேற்கண்ட சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.