குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பண்ருட்டி: டிராக்டர் மீது மினி லாரி மோதி விபத்து! 4 பேர் பலி

பண்ருட்டி அருகே முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர் மீது மினி லாரி மோதியதில் 4 தொழிலாளிகள் பலியானது பற்றி...

vehicle involved in the accident.

விபத்துக்குள்ளான வாகனம். - படம் - தினமணி

Published On :5 ஜூலை 2026, 11:55 am IST

பண்ருட்டி அருகே ஞாயிற்றுகிழமை (ஜூலை 5) முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர் டிப்பர் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயக் கூலி வேலைக்குச் சென்ற 4 பேர் பலியாகினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர், குறிஞ்சிப்பாடி வெங்கடாம்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தது.

இதனிடையே, விவசாயக் கூலி வேலைக்காக 10-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்றும் அதே வழியாகச் சென்றுள்ளது. இந்த நிலையில், பண்ருட்டி பணிக்கன்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிராக்டர் டிப்பர் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கணவன் - மனைவியான ராணி மற்றும் ரவிச்சந்திரன் என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி காந்திமதி, சத்யா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்கும்போது.

விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்கும்போது. - படம் - தினமணி

Summary

Four agricultural laborers died in an accident near Panruti on Sunday (July 5) when a mini-lorry collided with a tractor-tipper loaded with cashew wood.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.