கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

பண்ருட்டி: டிராக்டர் மீது மினி லாரி மோதி விபத்து! 4 பேர் பலி

பண்ருட்டி அருகே முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர் மீது மினி லாரி மோதியதில் 4 தொழிலாளிகள் பலியானது பற்றி...

News image

விபத்துக்குள்ளான வாகனம். - படம் - தினமணி

Updated On :5 ஜூலை 2026, 11:55 am IST

பண்ருட்டி அருகே ஞாயிற்றுகிழமை (ஜூலை 5) முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர் டிப்பர் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயக் கூலி வேலைக்குச் சென்ற 4 பேர் பலியாகினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர், குறிஞ்சிப்பாடி வெங்கடாம்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தது.

இதனிடையே, விவசாயக் கூலி வேலைக்காக 10-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்றும் அதே வழியாகச் சென்றுள்ளது. இந்த நிலையில், பண்ருட்டி பணிக்கன்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிராக்டர் டிப்பர் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கணவன் - மனைவியான ராணி மற்றும் ரவிச்சந்திரன் என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி காந்திமதி, சத்யா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்கும்போது.

விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்கும்போது. - படம் - தினமணி

Summary

Four agricultural laborers died in an accident near Panruti on Sunday (July 5) when a mini-lorry collided with a tractor-tipper loaded with cashew wood.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.