பண்ருட்டி அருகே ஞாயிற்றுகிழமை (ஜூலை 5) முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர் டிப்பர் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயக் கூலி வேலைக்குச் சென்ற 4 பேர் பலியாகினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர், குறிஞ்சிப்பாடி வெங்கடாம்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தது.
இதனிடையே, விவசாயக் கூலி வேலைக்காக 10-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்றும் அதே வழியாகச் சென்றுள்ளது. இந்த நிலையில், பண்ருட்டி பணிக்கன்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிராக்டர் டிப்பர் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கணவன் - மனைவியான ராணி மற்றும் ரவிச்சந்திரன் என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி காந்திமதி, சத்யா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்கும்போது. - படம் - தினமணி
Summary
Four agricultural laborers died in an accident near Panruti on Sunday (July 5) when a mini-lorry collided with a tractor-tipper loaded with cashew wood.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










