விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பெரம்பலூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.

News image

விபத்து - பிரதி படம் - file photo

Updated On :15 ஜூன் 2026, 10:09 am IST

பெரம்பலூர் அருகே, கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தினால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சங்கர், அரியலூரைச் சேர்ந்த விஜய் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர். மற்றொரு நபரின் அடையாளம் காணப்படவில்லை.

பெரம்பூரைச் சேர்ந்த சங்கர், தன்னுடைய நண்பர்களான அரியலூர் மாவட்டம் அண்ணாசிநல்லூரைச் சேர்ந்த விஜய் உள்ளிட்ட நண்பர்களுடன் காரில் பெரம்பலூர் அருகே துரையூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து நேரிட்டது.

இதில் காரில் வந்த மூவரும் பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மூவரின் உடல்களைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.