கடந்த மூன்று நாள்களில் 1.40 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவாகியுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா வியாழக்கிழமை (ஜூன் 11) தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப் 28 ஆம் தேதி தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாததால் தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால், உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப்போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் சந்தையில் கச்சா என்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளில் எரிபொருள்கள், உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளதோடு தட்டுப்பாடும் நிலவுகிறது.

இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா. - படம் - பிடிஐ
இதுகுறித்து சுஜாதா ஷர்மா தெரிவித்ததாவது:
நாட்டில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், எல்பிஜி மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் சீராக உள்ளது. நமது சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனில் இயங்கி வருகின்றன. சில சில்லறை விற்பனை நிலையங்களில் வழக்கத்தை விட அதிகமான விற்பனை காணப்படுகிறது.
நாங்களும் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களும் தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்யப் பணியாற்றி வருகிறோம். கடந்த மூன்று நாள்களில், 1.40 கோடி (14 மில்லியன்) சமையல் எல்பிஜி சிலிண்டர்களுக்கான முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், 1.49 கோடி (14.9 மில்லியன்) சிலிண்டர்கள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில், ஏறத்தாழ 22,340 டன் எல்பிஜி விற்பனை செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
Summary
Sujata Sharma, Joint Secretary in the Ministry of Petroleum and Natural Gas, stated on Thursday (June 11) that 1.40 crore LPG cylinders have been booked over the past three days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










