சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு

நுண் நிதி நிறுவனங்களுக்கான (எம்எஃப்ஐ) கடன் உத்தரவாத திட்டத்தை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2026, 3:33 am IST

நுண் நிதி நிறுவனங்களுக்கான (எம்எஃப்ஐ) கடன் உத்தரவாத திட்டத்தை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிகழாண்டு ஆகஸ்ட் 31 வரை அல்லது ரூ.20,000 கோடி மதிப்பிலான உத்தரவாதங்கள் அளிக்கப்படும் வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை நுண்நிதி நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டம்-2.0-ஐ நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் பெரிய அளவில் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்படும் நுண்நிதி நிறுவனங்கள், பிற நுண்நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கடன் வரம்பை ரூ.300 கோடியில் இருந்து ரூ.1,000 கோடியாக அதிகரிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு நிதி நிறுவனம் நிா்வகிக்கும் அனைத்து சொத்துகளின் மொத்த சந்தை மதிப்பில் 20 சதவீதம் என்ற ஒட்டுமொத்த உச்சவரம்பின் கீழ், இந்தக் கடன் வரம்பை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் திட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்தவும், நுண்நிதி நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.