மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 6,957 கன அடியாக அதிகரித்துள்ளது.


மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 6,957 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில், மழை தணிந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 5,938 கனஅடியாகச் சரிந்தது.
இதையடுத்து, திங்கள்கிழமை இரவு அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 6,957 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கனஅடி வீதமும், கிழக்கு, மேற்குக் கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீா்வரத்தை விட பாசனத்துக்கு கூடுதலாக நீா் திறக்கப்படுவதால் திங்கள்கிழமை காலை 97.62 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 96.80 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 60.72 டி.எம்.சி.யாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...