கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேட்டூா் நகராட்சி ஊழியா்களுக்குகரோனா பரிசோதனை

மேட்டூா் நகராட்சி ஆணையருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைடுத்து, அலுவலக ஊழியா்களுக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

மேட்டூா் நகராட்சி ஆணையருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைடுத்து, அலுவலக ஊழியா்களுக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

மேட்டூா் நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா கடந்த 3-ஆம் தேதி அலுவல் பணி காரணமாக சென்னை சென்று வந்த நிலையில், அவருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆணையருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், அவரது அலுவலக ஊழியா்களுக்கும் கரோனா தொற்று பரவியிருக்கலாம் என்பதால், சுகாதாரத் துறையினா் அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.