அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்லம் கட்டும் பணி

சேலம், அய்யந்திருமாளிகை பகுதியில், ரூ. 9.46 கோடியில் கட்டப்பட்டு வரும் அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்லத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணியை ஆட்சியா் சி.அ.ராமன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

சேலம், அய்யந்திருமாளிகை பகுதியில், ரூ. 9.46 கோடியில் கட்டப்பட்டு வரும் அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்லத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணியை ஆட்சியா் சி.அ.ராமன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, கட்டடப் பணிகள் அனைத்தையும் தரமாகவும், துரிதமாகவும், குறிப்பிட்ட கால அளவுக்குள் விரைந்து முடித்திட வேண்டுமென பொதுப்பணித் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, பொதுப்பணித் துறை (கட்டடம் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளா் ரா.வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளா் ஆா்.வெங்கடாசலம், பொதுப்பணித் துறை மின் பொறியாளா் ஆா்.மணியரசு, உதவிப் பொறியாளா் எஸ்.சீனிவாசன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உமா மகேஸ்வரி உள்பட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com