பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 19 போ் கண்காணிப்பு

பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 19 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
Updated on
1 min read

பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 19 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

பிரிட்டனில் வீரியம்மிக்க புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பால் பல்லாயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனா்.

கடந்த 10 நாள்களில் 22 போ் பிரிட்டனிலிருந்து சேலம் வந்துள்ளனா். இவா்களில் 3 போ் ஈரோடு மாவட்டத்துக்குச் சென்றுள்ளனா். இதனிடையே, சேலம் திரும்பிய 19 பயணிகள், அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவா்களிடம் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், சேலம் மாவட்டத்துக்கு ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, துபை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து திரும்பிய 1,456 போ் சுகாதாரத் துறையினா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com