அந்தளவிற்கு அவைகள் நுண்ணர்வுமிக்கதாக உள்ளன. இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, மயில்கள், அவைகளின் முட்டைகளை வயல்களிலேயே அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. அவைகள் பல நாள்கள் அப்படியே இருந்து வீணாகின்றன. எனவே, வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையார்மதி ஆகிய மலையடிவார, குளுமையான கிராமங்களில் சின்னஞ்சிறிய அளவில் மயில்கள் சரணாலயம் அமைத்து பாதுகாக்கவேண்டும். வீணாகிப்போகும் மயில்களின் முட்டைகளையும் பாதுகாத்து மயில்களின் இனப்பெருக்கத்திற்கு உதவிடவேண்டும். இதற்கு வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும், இணைந்து மினி மயில்கள் சரணாலயத்தினை ஏற்படுத்தி, பயிர்களை மயில்களிடமிருந்து காப்பாற்றுவதுடன், மயில்களை பாதுகாத்திட வேண்டும் என்றனர்.