சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அமெரிக்கர்கள் மீது நம்பிக்கையில்லை; பேச்சுவார்த்தை நடத்த முடியாது! - ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்கர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஈரானின் மறைந்த தலைமை மதகுரு கமேனியின் ஆலோசகர் கூறியுள்ளார்...

News image
கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு கமேனி புகைப்படத்துடன்... (கோப்புப் படம்)- ஏபி
Updated On :4 மார்ச் 2026, 10:24 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை ஈரான் அரசு ஒருபோதும் மேற்கொள்ளாது என ஈரானின் மறைந்த தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவப் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டன. இதில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீதும் ஈரானின் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல்வேறு நாடுகளின் அரசுகள் இருதரப்பும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் திட்டம் ஈரான் அரசுக்கு இல்லை என கமேனியின் மூத்த ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“அமெரிக்கர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய எந்த அடிப்படையும் எங்களுக்கு இல்லை. நாங்கள் விரும்பும் வரையில் இந்தப் போரை எங்களால் தொடர முடியும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபா கமேனி அந்நாட்டின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Mohammad Mokhber, an advisor to Iran's late Supreme Leader Ayatollah Ali Khamenei, has said that the Iranian government will never negotiate with the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.