25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?

ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அருகில் இஸ்ரேல் தாக்குதல்...

ஈரானின் தலைமை மதகுரு கமேனியின் அலுவலகம் அருகில் இஸ்ரேல் தாக்குதல்...

Published On :28 பிப்ரவரி 2026, 12:53 pm IST

ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தின் அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது சனிக்கிழமை (பிப். 28) இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் நடைபெற்றுள்ளதாக, அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது.

இருப்பினும், இந்த தாக்குதலின்போது 86 வயதான கமேனி அவரது அலுவலகத்தில் இருந்தாரா? அவரது நிலை என்ன? என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, 2025 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் நடைபெற்ற 12 நாள் போரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Israel has reportedly carried out an attack near the office of Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.