ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஈரானிய போர்க் கப்பலில் இருந்து 30 மாலுமிகளை மீட்ட இலங்கை!

இலங்கை கடற்படையால் ஈரானிய போர்க்கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு பற்றி..

News image
மீட்கப்பட்ட மாலுமிகள்.
Updated On :4 மார்ச் 2026, 9:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரானின் போர்க்கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் கடலில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலில் இருந்து 30 மாலுமிகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளதாக இலங்கை ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீது போர் தொடங்கியுள்ளன. ஈரானில் பல்வேறு முக்கிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்காவும்-இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு ஏவுகணைகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்களைப் பயன்படுத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 

இதனிடையே ஈரானின் போர்க்கப்பல்களை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தி கடலில் மூழ்கடித்து வருகின்றது. இதுவரை ஈரானின் 17 போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே ஈரானின் போர்க்கப்பலான ஐரிஸ் டெனா என்ற கப்பல் மூழ்கியிருப்பது தெரியவந்தது. இந்த போர்க்கப்பல் இந்திய பெருங்கடல் வழியாக இலங்கை அருகே வந்துள்ளது.

கப்பலில் இருந்த மாலுமிகள் இலங்கையிடம் உதவி கோரிய நிலையில், இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே மூழ்கிக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் டெனாவிலிருந்து 30 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் மீட்டதாக வெளிநாட்டு அமைச்சர் விஜேதா ஹேரத் தகவல் தெரிவித்தார். 

180 மாலுமிகளுடன் இருந்த ஈரானின் போர்க்கப்பல் மூழ்கிய நிலையில், அவர்களில் 30 மாலுமிகள் மீட்கப்பட்டு இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  ஈரானின் போர்க்கப்பல் எப்படி இந்திய பெருங்கடலில் இலங்கை வழியாக வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

summary

The Sri Lankan Navy on Wednesday rescued 30 sailors from the Iranian naval ship "IRIS Dena", which was in distress with around 180 sailors onboard, according to Sri Lankan media reports.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.