யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தம்மம்பட்டியில் வெயிலின் தாக்கத்தால் பால் உற்பத்தி குறைந்தது!

தம்மம்பட்டியில், கோடை வெயிலின் தாக்கத்தால், பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

News image
Updated On :25 மே 2020, 6:40 am

எஸ்.ரம்யா

தம்மம்பட்டியில், கோடை வெயிலின் தாக்கத்தால், பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மற்றும் செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, வாழக்கோம்பை, கொண்டையம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், அதிகளவு கறவை மாடுகள் உள்ளன. அதன்மூலம், இப்பகுதியில் அதிகளவு பால் உற்பத்தியாகிறது. இதனை,  20 க்கும் மேற்பட்ட, தனியார் பால் நிறுவனங்கள், ஆங்காங்கே ஊர்கள் தோறும், கொள்முதல் மையங்கள் அமைத்து, பால் உற்பத்தியாளர்களிடம் வாங்கி வருகிறது. இப்பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பால், திருச்சி, சேலம், வாழப்பாடி, கருமாபுரம் உள்ளிட்ட ஊர்களில் செயல்படும் தனியார் பால் நிறுவனங்களுக்கு செல்கிறது. 

தினமும், மிக அதிகளவில் அனுப்பப்பட்ட பாலின் அளவு, தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், முன்பை விட, தற்போது கறவை மாடுகள் சுரக்கும் பாலின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதுகுறித்து, தம்மம்பட்டியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது, ஆண்டுதோறும், கோடை காலத்தின் உச்சமான, மே மாதம் வரும் அக்னி நட்சத்திரம் நாட்களில், பால் அதிகம் கறக்கும் ஹெச்.எப். கலப்பின மாடுகள், கருப்பு வெள்ளை கலப்பின மாடுகள், வெயிலின் வெப்பத்தை தாளமுடியாமல், அதிகளவு மூச்சு வாங்கும், அதனால் மாடுகளுக்கு நீர்ச்சத்து குறையும். 

நீர்சத்து குறைபாட்டால், கடந்த மாதங்களை விட, தற்போது கறக்கும் பால் அளவு குறையும். இதனால், இப்பகுதியில் பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது என்றனர். இதுகுறித்து, கால்நடை மருத்துவர் கூறியதாவது, வெயிலின் தாக்கத்தில் இருந்து மாடுகளை பாதுகாக்க, காலை 9 மணிக்கு மேல் வெயிலில், மாடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது. மர நிழல், கீற்று வேய்ந்த கொட்டகைகளில் மாடுகளை கட்ட வேண்டும்.  மூச்சு வாங்கும் மாடுகளின் தலையில் குளிர்ந்த தண்ணீரால் குளிப்பாட்ட வேண்டும். 

மாடுகளுக்கு சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க, கால்சியம் டானிக், தாது உப்பு கலவையை தீவனத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும், என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.