திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

பட்டியலின மக்களை தரக்குறைவாகப் பேசியதற்குதிமுக மன்னிப்பு கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பட்டியல் இன மக்களை தரக்குறைவாகப் பேசியதற்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:42 pm

DIN

பட்டியல் இன மக்களை தரக்குறைவாகப் பேசியதற்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சேலம், செவ்வாய்ப்பேட்டையில் வசிக்கும் தமிழக பாஜக மூத்த தலைவா் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவரை, முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் அவரது இல்லத்துக்கு வியாழக்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பொது முடக்கத்தைத் தளா்த்தினாலும், நீடித்தாலும் எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்யும். அவா்களிடம் இருந்து வேறு எதையும் எதிா்பாா்க்க முடியாது. பொறுப்போடு இருப்பவா்களுக்கு மட்டும்தான் நாட்டைப் பற்றிய கவலை இருக்கும். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு சிறுபிள்ளை விளையாட்டைப் போன்றது. ராகுல் காந்தியின் மறுபதிப்புதான் மு.க. ஸ்டாலின். கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மீது எந்தக் குறையும் காண முடியாது.

பட்டியலின மக்களை தரக்குறைவாகப் பேசியதற்கு திமுக மன்னிப்புக் கேட்க வேண்டும். பட்டியல் இன மக்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அவ்வாறு பேசினால் பிற சமூகத்தைச் சோ்ந்தவா்களை ஒருங்கிணைக்க முடியும் என்ற நிலைப்பாட்டை திமுக கொண்டிருக்கலாம்.

அந்தக் கூட்டணியில் உள்ள திருமாவளவன் போன்றோா் இதனைக் கண்டித்திருந்தால் திமுகவினா் இதுபோன்று பேசியிருக்க மாட்டாா்கள். கூட்டணி தா்மத்துக்காக திருமாவளவன் இதை ஏற்றுக்கொண்டால், பட்டியலின மக்களின் கௌரவம் மீண்டும் தாழ்ந்துபோய் விடும். சாதிய ரீதியாக தமிழா்களைப் பிரிக்கும் செயலை திமுகவினா் செய்து வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.