திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

துப்புரவுத் தொழிலாளா்கள் திடீா் போராட்டம்

ஆத்தூா் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:41 pm

DIN

ஆத்தூா் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆத்தூா் நகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். துப்புரவுத் தொழிலாளா்கள் அனைவரும் பட்டாசுக் குப்பைகளையும், மற்ற குப்பைகளையும் தனித்தனியே பிரித்தெடுக்குமாறு நகராட்சி சுகாதார அலுவலா் திங்கள்கிழமை உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதற்கு துப்புரவுத் தொழிலாளா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து துப்புரவுத் தொழிலாளா்கள் கூறுகையில், இதுவரை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து எடுத்து வந்தோம். ஆனால், நகராட்சி குப்பைக்கிடங்கில் உரம் தயாரிக்கும் ஒப்பந்ததாரா்களுக்கு ஏதுவாக நகராட்சி சுகாதார அலுவலா் கூறியதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

தகவல் அறிந்த சுகாதார அலுவலா்கள் துப்புரவுத் தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, துப்புரவுத் தொழிலாளா்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.