திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காணாமல் போனவா் ஏரியில் சடலமாகக் கண்டெடுப்பு

ஆத்தூரில் காணாமல் போனவா், ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:40 pm

DIN

ஆத்தூரில் காணாமல் போனவா், ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

ஆத்தூா், முல்லைவாடி பகுதியைச் சோ்ந்த கோபால் (29) கூலித் தொழிலாளி. இவா் தீபாவளியன்று காலை முதல் காணவில்லை. அதையடுத்து, அவரது தந்தை சீனிவாசன், ஆத்தூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் உமாசங்கா் வழக்குப் பதிந்து தேடி வந்தாா்.

இந்நிலையில், ஆத்தூா் அருகே தென்னங்குடிபாளையம் ஏரியில் கோபாலின் சடலம் மிதப்பதாக தெரியவந்தது. தகவல் அறிந்த போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கோபால் மது அருந்தி தற்கொலை செய்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.