பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலம் உருக்காலை முன்பு தொழிலாளா்கள்3-வது நாளாகப் போராட்டம்

கரோனா பாதிப்பால் உயிரிழந்த உருக்காலை தொழிலாளியின் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்க வலியுறுத்தி, மூன்றாவது நாளாகத் தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 6:36 pm

DIN

கரோனா பாதிப்பால் உயிரிழந்த உருக்காலை தொழிலாளியின் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்க வலியுறுத்தி, மூன்றாவது நாளாகத் தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், உருக்காலை பணிமனையில் வெப்பப் பிரிவில் முதுநிலை தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்த கண்ணன், கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்ட நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டு இறந்தாா்.

இந்த நிலையில் உயிரிழந்த தொழிலாளி கண்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு, இரும்பாலையில் பணி வழங்க வலியுறுத்தி, சேலம் உருக்காலை தொழிற்சங்கத்தினா் நுழைவாயில் முன்பு அமா்ந்து சனிக்கிழமை இரவு முதல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஊழியா்களின் போராட்டம் காரணமாக இரும்பாலை வளாகத்தின் உள்ளே இருந்து யாரும் வெளியே வர முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, உருக்காலை நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தி வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.