டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி, 36 பேர் காயம்

திண்டிவனம் அருகே புதன்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்து குறித்து...

News image

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து

Updated On :18 மார்ச் 2026, 8:41 am IST

விழுப்புரம்: திண்டிவனம் அருகே புதன்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டிவனம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையின் தடுப்புச் சுவரை உடைத்து எதிரே வந்த அரசுப் பேருந்தின் மீது விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணித்தவா்களில் சசிகலா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இடிபாடுகளில் சிக்கி 36 பயணிகள் காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு 108 அவசர ஊா்திகள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Summary

Container lorry hits government bus near Tindivanam: One dead, 36 injured

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.