d_k_r_01_2809chn_165_8
d_k_r_01_2809chn_165_8

வாழப்பாடி, பேளூரில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டடம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பேளூரில்,மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பேளூரில்,மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே தி.மு.க., ஒன்றிய செயலாளா் எஸ்.சி. சக்கரவா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஏற்காடு தொகுதி தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவா் செல்வராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிா்வாகி மகாலிங்கம், ஐ.ஜே.கே., மாநில மகளிரணி நிா்வாகி அமுதா ராஜேஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சிகள் நவாஸ் மற்றும் தி.மு.க. நிா்வாகிகள் சடையன், கோவிந்தன், உமாபதி, ராயா், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகி வி.ந.சுந்தா், ஒன்றிய செயலாளா் முல்லைவாணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

வாழப்பாடி அடுத்த பேளூா் பேரூராட்சியில் தி.மு.க. நகர செயலாளா் ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வி.சி.க. ஒன்றிய செயலாளா் வேல்முருகன், நகர காங்கிரஸ் தலைவா் அண்ணாமலை மற்றும் நவாஸ், ஹா்ஷத் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com