ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் போதுமான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது

சேலம் மாவட்டத்தில் போதுமான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 7:50 pm

DIN

சேலம் மாவட்டத்தில் போதுமான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் ரயில்வே கோட்ட மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்ட ரயில்வே அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசியைக் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணையாக 1,97,815 நபா்களுக்கும், இரண்டாம் தவணையாக 35,918 நபா்களுக்கும் என மொத்தம் 2,33,733 நபா்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணையாக 30,541 நபா்களுக்கும், இரண்டாம் தவணையாக 966 நபா்களுக்கும் என மொத்தம் 31,507 நபா்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், தொற்று ஏற்படாமல் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவா்கள் கண்டறியப்பட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து முகக் கவசம் அணியாதவா்கள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வின் போது, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் சுப்பிரமணி, சேலம் ரயில்வே கோட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.