தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆடிப்பெருக்கு விழாவிற்கு தடை: வெறிச்சோடிய காவிரி அணை பகுதி

கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூலாம்பட்டி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

News image

வெறிச்சோடிய காவிரி அணை பகுதி

Updated On :1 ஆகஸ்ட் 2021, 6:43 am

DIN

கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூலாம்பட்டி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள காவிரிக்கரை பகுதிகளில், பெரும் திரளான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி வழிபாடு செய்வது வழக்கம். 

இந்நிலையில், நடப்பாண்டில் கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள காவிரிக் கரையோரங்களில் புனித நீராடவும், வழக்கமான ஆன்மீக செயல்பாடுகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

இதன்படி இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை, பூலாம்பட்டி காவிரி கடைமடை பகுதி|, படகுத்துறை, பரிசல் துறை, படித்துறை மற்றும் கைலாசநாதர் ஆலயம், நந்திகேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடவும் புனித நீராடி ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

மேலும் இந்த மூன்று நாட்களுக்கு பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை விதித்துள்ளது. மேலும், அப்பகுதியில் வாடகை ஆட்டோக்கள் டாக்சிகள், விசைப்படகுகள் இயங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள தடை உத்தரவினை அடுத்து, எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் கூடுதலான எண்ணிக்கையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.