வயதான தம்பதியின் ரூ. 12 லட்சம் தங்க, வைர நகைகள் மாயம்
சேலத்தில் வயதான தம்பதி வைத்திருந்த ரூ. 12 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


சேலத்தில் வயதான தம்பதி வைத்திருந்த ரூ. 12 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை, அண்ணா சாலை பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் (73), ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி பிரேமா. இருவரும் புதன்கிழமை சேலத்தில் உள்ள உறவினரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக வந்தனா். சீலநாயக்கன்பட்டி பகுதியில் இறங்கி, அங்கிருந்து பேருந்தில் ஏறி பழைய பேருந்து நிலையத்துக்கு சென்றனா். அங்கிருந்து ஆட்டோவில் பட்டைகோயில் பகுதிக்கு சென்றனா்.
அப்போது, பிரேமா தான் வைத்திருந்த கைப்பை காணாமல் போனது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அதில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, சேலம் நகர குற்றப் பிரிவு போலீஸில் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...