ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9.00 மணிக்கு 120 அடியாக இருந்தது. 

News image
Updated On :6 டிசம்பர் 2021, 4:58 am

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9.00 மணிக்கு 120 அடியாக இருந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 20,400 கனஅடியிலிருந்து 25,400 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த 29-ந்தேதி நீர்வரத்து குறைந்ததால் மூடப்பட்டிருந்த உபரி நீர் போக்கி என 16 கண் பாலம் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது. உபரி நீர் போக்கி வழியாக விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.