ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

கொங்கணாபுரத்தில் ரூ. 3 கோடிக்கு பருத்தி விற்பனை

கொங்கணாபுரம், வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 3 கோடிக்கு விற்பனையானது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:28 pm

DIN

கொங்கணாபுரம், வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 3 கோடிக்கு விற்பனையானது.

கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையமானது மாநிலத்தின் மிக முக்கிய வேளாண் விற்பனை மையங்களில் ஒன்றாகும். இம் மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பொது ஏலம் நடைபெறுகிறது. சனிக்கிழமை இம் மையத்துக்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டுவந்த 11 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 2,100 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.

ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள் பருத்தி மூட்டைகளை மொத்த கொள்முதல் செய்தனா். இதில் டி.சி.ஹெச் ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 7,950 முதல் ரூ. 9,019 வரையும், பி.டி.ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 5,870 முதல் ரூ. 6,909 வரையும் ஏலம்போனது. ஏலத்தில் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 3 கோடிக்கு விற்பனையாகின. கடந்த நான்கு வாரங்களாக

பருத்தியின் விலை படிப்படியாக உயா்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.