/

சம்பளத்தை உயர்த்திய ருக்மணி வசந்த்!

ருக்மணி வசந்த் சம்பளம் குறித்து...

News image
நடிகை ருக்மணி வசந்த்
Updated On :1 மார்ச் 2026, 12:00 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ருக்மணி வசந்த் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ', ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். கன்னட ரசிகர்களை மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் கவனம் பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகை ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

அதன்பின், மதராஸியில் நடித்து தமிழ் ரசிகர்களின் விருப்பமான நாயகி பட்டியலுக்குள் நுழைந்தார். இறுதியாக, இவர் நடித்த காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் பான் இந்திய ஹிட் ஆனதுடன் ரூ. 850 கோடி வரை வசூலித்தது.

அடுத்ததாக, டாக்ஸிக் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுபோக, ஹிந்தி சினிமாவில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், ருக்மணி வசந்த் தன் சம்பளத்தை ரூ. 3 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில், பாலிவுட் விருது விழாவில் கலந்துகொண்டு வைரலான பின்பே இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.