48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பில் 2 மணிநேரம் அழுத வெற்றி வசந்த்! ஏன்?

படப்பிடிப்பின்போது நடிகர் வெற்றி வசந்த் 2 மணிநேரம் அழுதது குறித்து...

News image

வெற்றி வசந்த் - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :18 பிப்ரவரி 2026, 10:50 am

சிறகடிக்க ஆசை தொடரில் நாயகனாக நடித்துவரும் நடிகர் வெற்றி வசந்த் படப்பிடிப்புதளத்தில் 2 மணிநேரம் அழுதுள்ளார். இதற்கான காரணம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் கோமதி பிரியா நாயகியாகவும், இவருக்கு ஜோடியாக வெற்றி வசந்த், நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.

வெற்றி வசந்த்

வெற்றி வசந்த் - படம் - இன்ஸ்டாகிராம்

இதுமட்டுமின்றி சுந்தர்ராஜன், அனிலா ஸ்ரீகுமார், சல்மா அருண், ப்ரீத்தா ரெட்டி, ஸ்ரீ தேவா உள்ளிட்ட பலரின் நடிப்பும் சிறகடிக்க ஆசை தொடருக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

ஆடம்பரங்கள் ஏதுமின்றி இயல்பாக எடுக்கப்பட்டுவரும் சிறகடிக்க ஆசை தொடர், நடுத்தரக் குடும்பத்தின் பிரச்னைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதால், பலரும் கதையுடன் தொடர்புபடுத்திக்கொள்வதால், இத்தொடருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் வெற்றி வசந்த்

படப்பிடிப்பு தளத்தில் வெற்றி வசந்த் - படம் - இன்ஸ்டாகிராம்

நடிகர் வெற்றி வசந்த்தின் நடிப்பும் இயல்பான சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவரைப்போன்று இருப்பதால், சின்ன திரை விஜய் சேதுபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு வெற்றி வசந்த் அழுதுள்ளார்.

Story image

படம் - இன்ஸ்டாகிராம்

மிகவும் உருக்கமான வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததால், அன்றைய நாள் படப்பிடிப்பில் அழுது நடித்ததாகவும், ஆனால் காட்சியுடன் ஒன்றிவிட்டதால், அதன் பிறகும் அழுதுகொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் நாயக பிம்பம் ஏதுமின்றி, அனைவருடனும் பழகும் தன்மை கொண்ட வெற்றி வசந்த்தின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Summary

Serial Actor Vetri Vasanth cried for 2 hours during the shooting of Siragadikka Aasai serial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.