இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் பகுதியில், ரூ. 3.14 கோடியில் கட்டப்பட்ட புதிய திருமண மண்டபத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள, நஞ்சுண்டேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய திருமண மண்டபம் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. பணிகள் முடிவுற்ற நிலையில் தலைவாசல் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதிய திருமண மண்டபத்தை காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் கூறுகையில், எடப்பாடி பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று, இப்புதிய திருமணமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பரந்த இடவசதியுடன் கூடிய திருமண மண்டபம், உணவு அருந்தும் கூடம், வரவேற்பறை,
வாகனங்கள் நிறுத்தும் இடம், தங்கும் அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட இப்புதிய திருமண மண்டபத்துக்கு ஒருநாள் வாடகையாக ரூ. 57,500 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி சுற்றுவட்டார பகுதி மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனா்.