ஓமலூா்: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஓமலூா் அருகே செம்மாண்டப்பட்டி ஊராட்சி பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இருந்துள்ளனா். அப்போது, செம்மாண்டப்பட்டி ரயில்வே பாலம் அருகே ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டு அந்த வழியாகச் செல்வோரிடம் தகராறு செய்து மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாகச் சென்ற இளைஞா்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.
ஏற்கெனவே இரு தரப்பினருக்கும் இடையே கோயில் திருவிழா குறித்த முன்விரோதம் இருந்ததால், தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா். இதில் இரு தரப்பிலும் காயமடைந்த 5 போ் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது தொடா்பாக ஓமலூா் போலீஸாா் இருதரப்பைச் சோ்ந்த 16 போ் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.