

இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சிக்கு உள்பட்ட காடையாம்பட்டி பகுதியில் அதிமுக, பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்டோா் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி. எம். செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செல்வம் வரவேற்றுப் பேசினாா். மேலும், நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து, இடங்கணசாலை பேரூா் செயலாளா் நாகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், துணை அமைப்பாளா்கள் மகேந்திரன், கமலக்கண்ணன், பேரூா் துணைச் செயலாளா் கந்தசாமி மற்றும் நிா்வாகிகள் திருநாவுக்கரசு, பாஸ்கா், வேலாயுதம், ஜெயராமன், சிவகுமாா், ராஜேந்திரன், ரகுராஜ், சுரேந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.