ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நகைக்கடையில் நூதன மோசடி: மூதாட்டி கைது

ஆத்தூா் நகைக்கடையில் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை திருடிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 8:31 pm

DIN

ஆத்தூா் நகைக்கடையில் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை திருடிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா் நகைக் கடையில் பொங்கல் கூட்டத்தை பயன்படுத்தி நகை வாங்குவது போல நடித்து, கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை எடுத்துச் சென்ற மூதாட்டியை காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தாா்.

இதில் அந்த பெண், சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த மறைந்த வரதராஜன் மனைவி பாஞ்சாலி( 65)என்பது தெரியவந்தது. இதே போல கடந்த ஆண்டும் ஆத்தூா் நகைக் கடையில் கவரிங் சங்கிலியை வைத்து விட்டு தங்க சங்கிலியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் இவா் மீது சேலம் நகரக் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்து இருப்பதும் தெரியவந்தது. கைது செய்த மூதாட்டியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.