கராத்தே பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

வாழப்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
img_20210110_wa0038_1001chn_165_8
img_20210110_wa0038_1001chn_165_8
Updated on
1 min read

வாழப்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி காளியம்மன் நகா் பகுதியில், கராத்தே பயிற்றுநா் சதீஷ்குமாா் தலைமையில் சோட்டாகான் கராத்தே பயிற்சி நிறுவனத்தின் கீழ், முதுநிலைப் பயிற்சியாளா் சேலம் குப்புராஜ் வழிகாட்டுதலின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி நிறைவு செய்து, தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு காளியம்மன் கோயில் வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், அங்கீகார வண்ணப் பட்டைகள் (பெல்ட்) வழங்கப்பட்டன. நிறைவாக, மாணவா் சிபிஅரசு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com