கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசு அருங்காட்சியகம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி

பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம் சாா்பில் சேலம் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:55 pm

DIN

பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம் சாா்பில் சேலம் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

பொங்கல் விழாவின் சிறப்புகள் என்ற பொருளில் தமிழா்களின் பண்பாடு, வரலாற்று சிறப்புகளை விளக்கும் வகையில் கட்டுரை அமைய வேண்டும். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கு கொள்ளலாம். 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும், 9, 10 ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும், 11, 12 ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும் போட்டிகளில் பங்கேற்கலாம்.

கட்டுரை 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.மாணவா்கள் தங்களது படைப்புகளை ஜனவரி 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக சேலம் அரசு அருங்காட்சியகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம்.

பெயா், வகுப்பு, முகவரி, செல்லிடப்பேசி எண்ணை குறிப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94434 78024 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் ஜெ.முல்லை அரசு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.