திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் அமைச்சா் ஆய்வு

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூரில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் இந்த ஆலயத்தில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனது. இந்த ஆலயத்தை புனரமைக்க தமிழக அரசு ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

அதில் அமைக்கப்பட்ட ஆலயத்தின் ராஜகோபுர முன் மணிமண்டபம், கோயில் திருப்பணி, தரைத்தளம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா். ஆலய அா்ச்சகா் வேங்கடசுப்பிரமணிய குருக்கள் அமச்சரை வரவேற்றாா். அவருடன் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.டி.அா்ச்சுணன், அ.லோகநாதன், முன்னாள் நகர மன்ற உறுப்பினா் அ.சகாதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.